உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் - தமிழக அரசுக்கு நோட்டீஸ்

by Staff / 17-02-2024 01:58:58pm
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் - தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு மீது, மார்ச் 26ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், நம்பர் பிளேட்களை குற்ற செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் கட்டாயம் என மத்திய அரசு 2019-ல் உத்தரவிட்டிருந்தது. இதுவரை எந்த நிறுவனத்தையும் உயர் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களாக அரசு அறிவிக்கவில்லை. மத்திய அரசு உத்தரவிட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தமிழக அரசு இதுவரை எந்த நிறுவனத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

Tags :

Share via