தீ விபத்து... 17 பேர் பலி
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வடக்கு ஜகார்த்தாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கனமழை மற்றும் மின்னல் காரணமாக தீ பரவியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். தீ மளமளவென பரவியதால் மக்கள் பீதியில் ஓடினர். 37 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags :