கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா
கச்ச தீவிலுள்ள புனித அந்தோணியார் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .திருஜபமாலை ,திருச்சிலுவை பாதை, தியானம்,நற்கருணை ஆராதனையுடன் இரவு ஏழு மணிக்குஅலங்காரத்தேரில் அந்தோணியார் வீதியுல நடைபெற்றது.இன்று இரவு ஏழுமணிக்கு இலங்கை பாதரியரால் கூட்டுப்பிரார்த்தனையும் திருச்செபமாலையும் திருப்பலியும் கொடியேற்றமும் நிகழ்த்தப்பெறும் .இரண்டாண்டு கொரோனா காலத்திற்கு பிறகு நடைபெறும் விழாவில் அனுமதிக்கவர்கள் இருநாட்டு மீனவ சமூகத்தினர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர் .கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 1,500 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,400 பேரும் பங்கேற்றுள்ளனர் .நேற்று இந்தியா சார்பில் கச்சத்தீவு திருவிழா நடந்த நிலையில் 2-வது நாளாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Tags : Kachchathivu St. Anthony Temple Festival