கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக கலவரம் -துப்பாக்கி சூடு

by Editor / 17-07-2022 11:40:50am
 கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக கலவரம் -துப்பாக்கி சூடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த ஸ்ரீமதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவத்தில் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து பல்வேறு மாணவ அமைப்பினர் பள்ளி வளாகத்தின் அருகே போராட்டம் செய்து கொண்டு இருந்த நிலையில் திடீரென அது வன்முறையாக மாறியுள்ளது...இதனையடுத்து காவல்துறையினர் போதிய அளவில் இல்லாத சூழலில் போராட்டக்கார்கள் பள்ளிக்கு நுழைந்து அனைத்து பொருட்களையும் சூறையாடி வந்துள்ளனர். காவல்துறை சேர்ந்த  10 க்கு மேற்பட்ட  பலத்த காயம் காவல் கண்காணிப்பாளர் பலத்த காயம் அடைந்துள்ளார்.மேலும் காவல்துறை வந்த அனைத்து வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி சென்னை நெடுஞ்சாலையில் பெரும் பதற்றம் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.2 முறை  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறை வாகனத்திற்கு தீவைப்பு, காவல்துறை சார்பில் வைக்கபட்டதடுப்புகளுக்கும்  தீவைப்பு.

 

Tags : Riot-shooting over the death of a girl student in Kallakurichi

Share via