கைவிசை தண்ணீர் பம்பை சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை தண்ணீர் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு

by Editor / 25-08-2022 01:02:51pm
கைவிசை  தண்ணீர் பம்பை  சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை தண்ணீர் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பயன்பாட்டில் இருந்த கைவிசை  தண்ணீர் பாம்பு சேர்த்து சாலை போடப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக இருப்பதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளியம் பட்டி ஊராட்சியில் உள்ள திருப்பதி கோவில் குருசாமி கொட்டாய் வரை 6 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை போடப்பட்டது .இதில் சாலையோரமாக இருந்த  கைவிசை  தண்ணீர் பாம்பையும் சேர்த்து  கான்கிரீட் சாலை போடப்பட்டதால் தண்ணீர் பெற முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். மேலும் கைவிசை  பம்பை   சாலை மட்டத்திலிருந்து உயர்த்தி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

 

Tags :

Share via