தூத்துக்குடி 2ஆம் கேட் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி காலை வரை மூடல்: தென்னக ரயில்வே தகவல்.

by Editor / 12-03-2023 07:59:07am
தூத்துக்குடி 2ஆம் கேட் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி காலை வரை மூடல்: தென்னக ரயில்வே தகவல்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி 2ஆம்  ரயில்வே கேட் 13ம் தேதி இரவு முதல் 15ஆம் தேதி காலை வரை மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மதுரை முதல் தூத்துக்குடி வரைவிலான இரட்டை வழி பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீளவிட்டான் வரை இரட்டை வழி பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை இரட்டை வழி பாதை அமைப்பதற்காக தண்டவாளங்கள் பொருத்து பணி, நடைமேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தூத்துக்குடி நகரத்திலிருந்து தருவைகுளம் சாலையை இணைக்கும்  2வது ரயில்வே கேட் பகுதியில் வருகிற 13ம் தேதி இரவு 10.00 மணி முதல் 15ஆம் தேதி காலை 06.00 மணி வரை இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் காரணமாக மேற்கண்ட நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படும் எனவும் பொதுமக்கள்  1வது கேட் வழியாக சாலை போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு தென்னக ரயில்வே முதுநிலை மேலாளர் (சிவில்) தங்கவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via