பள்ளி நிர்வாகம் கடுமையாக கண்டித்ததால் மனமுடைந்த பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி
காஞ்சிபுரம் அருகே பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற மாணவனை பள்ளி நிர்வாகம் கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனை அடுத்து அவன் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் எந்தவித அசம்பாவிதமும் நேராத வகையில் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Tags :