நடப்பு ஆண்டில் இதுவரை ரயில்வேக்கு 259.44 கோடி இழப்பு
நடப்பாண்டில் ரயில்வே 259 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் ரயிலுக்கு தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து காரணமாக சுமார் 102 கோடியே 96 லட்சம் ரூபாய் அளவிற்கு ரயில் கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags :