கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே தனியார் மருந்தியல் கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தை சேர்ந்த அம்மாணவி விக்கிரவாண்டியில் உள்ள கல்லூரியில் மருந்தியல் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று கல்லூரியின் மாடியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் படுகாயத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஏற்கனவே வலிப்பு வந்ததாக கூறப்படும் நிலையில் மயக்கமுற்று கால் தவறி கீழே விழுந்ததாக கல்லூரி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Tags :