கமல் தான் உதயநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

by Admin / 28-07-2022 12:34:45am
 கமல் தான்  உதயநிதிக்கு  நன்றி சொல்ல வேண்டும் .

உதயநிதியின் பட நிறுவனமான ரெட் ஜெயன்ட்  தொடங்கப்பட்டு  பதினைந்து ஆண்டுகள் பல வெற்றிப் படங்களை   தயாரித்து  வெளியிட்டு புகழ்  பெற்றது.  இந்நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு   பாராட்டுத் தெரிவிக்கும்  முகமாக ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  .இதற்கு கமலஹாசன்  சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.


கமலஹாசனின்  ராஜ்கமல்  பிச்சர்ஸ்  54 படங்கள் எடுத்திருந்தாலும்  சமீபத்தில் அவர் நடித்து தயாரித்து  லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த விக்ரம் படத்தை  வெளியிடும் உரிமையை ரெட்ெ ஜயன்ட்  பெற்றிருந்தது .இப்படத்தை கமலை  தம் அரசியல்  செல்வாக்கால் மிரட்டி வாங்கி விட்டார்  என்கிற விமர்சனம் எழுந்தது. இது குறித்து  உதயநிதியே சொல்லியிருந்தார். கமல் எந்த மிரட்டலுக்கும்  பயப்படாதவர் .நான் அவரிடம் கேட்டேன்  வெளியிட ஒத்துக்கொண்டார் என்று கூறினார்.

உண்மையில், கமல் தான்  உதயநிதிக்க நன்றி சொல்ல வேண்டும் .இந்தப்படத்தை வேறு  எவரும்  வாங்கியிருந்தாலும் விக்ரம்  இந்தளவு சென்று சேர்ந்திருக்குமா என்று தெரியாது.53 படங்களில்  இந்தப்படம் தான் கமல்ஹாசனை  கடனாளியாக்காமல்   கோடிகளில்  திளைக்க வைத்திருக்கிறது . அதன்  பிரதிபலனாக  கமல்ஹாசன் தன் ராஜ் கமல் தயாரிப்பில் உதயநிதியை வைத் து தயாரிக்க  இருப்பதாக  அறிவிப்பை வெளியிட்டார்.

விக்ரம்  படத்தின் வெற்றி  அவரை நெகிழ  வைத்ததால் ,மனிதர்  ஏகத்துக்கும் நன்றி பாராட்டிக்கொண்டிருக்கிறார்.கமலஹாசனின்
நன்றி அகம் இப்பொழுது பிரகாசித்துக்கொண்டிருக்கிறது .இன்னும் அடுத்தடுத்த படம் வெற்றி பெறட்டும்  .அவருக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களும்  செயல்களும்  முழுமையடையும்.

 

Tags :

Share via