பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியின் அடியாட்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து இளம்பெண்ணை மிரட்டியதாக புகார்
நொய்டாவில் இளம்பெண்ணை மிரட்டி தாக்கிய வீடியோ வைரல் ஆனது அடுத்து தலைமறைவான பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த தியாகியின் அடியாட்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து அந்த பெண்ணை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. குடியிருப்புவாசிகள் உறுதியுடன் நின்று ரவுடிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து உள்ளனர். இதையடுத்து தியாகியின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக எம்பி மகேஷ் சர்மா உத்தரப்பிரதேச உள்துறைச் செயலாளர் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் மிரட்டியது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
Tags :