சின்ன செய்திகள் சில வரிகளில்

by Editor / 27-11-2021 11:37:29pm
சின்ன செய்திகள் சில வரிகளில்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது நீரை வெளியேற்ற  கோவில் நிர்வாகம் தீவிர முயற்சி.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
அவர்கள் புதிய உருமாறிய ‘ஒமீக்ரான்’ கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய ஆய்வு.

இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்களுக்கான பயிற்சி ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தந்த மையங்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி – கனரக வாகனங்களுக்கு நவ.30 வரை தடை
டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நவம்பர் 30 வரை நீட்டிப்பு
காற்று மாசு காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையை மீறினால் 5 ஆண்டுகள் சிறை – டெல்லி அரசு
மின்சார, சிஎன்ஜி வாகனங்கள் டெல்லிக்குள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் – மாநில அரசு


சாவியை ஒப்படைக்க கோரி தீபா, தீபக் மனு
ஜெயலலிதா வசித்த போயஸ் இல்ல சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி தீபா, தீபக் ஆட்சியரிடம் மனு
போயஸ் இல்ல சாவியை ஒப்படைப்பது பற்றி அரசு வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு – ஆட்சியர்

கடந்த 200 வருடங்களில் 3வது முறையாக நவம்பர் மாதம் சென்னையில் 1000மி.மீ மழை பதிவாகியுள்ளது.
1918 நவம்பர்  - 1088மி.மீ
2005 அக்டோபர் - 1078மி.மீ
2015 நவம்பர் - 1049 மி.மீ
2021 நவம்பர் - 1003 மி.மீ இன்று இரவு 7.30 மணி வரை


 

 

Tags :

Share via