அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை
அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி தான்யாவுக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிரிப்பதும் அருகே தளத்திலுள்ள சவிதா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் உலக அளவில் இரண்டரை லட்சம் பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாகவும் சிறுமி அதிகளவு முக சிதைவு ஏற்பட்டதால் சுமார் 8 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags :