வங்கியில் தங்கம் கொள்ளை.. ஊழியரே கைவரிசையை காட்டியது அம்பலம்

by Editor / 14-08-2022 12:30:44pm
வங்கியில் தங்கம் கொள்ளை.. ஊழியரே கைவரிசையை காட்டியது அம்பலம்

சென்னை, அரும்பாக்கம் பகுதியிலுள்ள ஃபெட் வங்கியின் கிளையில் தற்போது ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரித்தபோது, இந்த கொள்ளை சம்பவத்தை அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியரே நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், கட்டிப்போட்டு விட்டு வங்கியின் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சுமார் ரூ.20 கோடி மதிப்பு பெரும். இதையடுத்து காவல்துறையினர், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via