சென்னையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்

by Editor / 06-09-2021 09:49:05am
சென்னையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. சமீபத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், கொரோனா காரணமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது.

 

Tags :

Share via