குற்றால அருவிகளில் 5வது குளிக்க தடை

by Editor / 05-08-2022 09:19:59am
 குற்றால அருவிகளில் 5வது குளிக்க தடை

 குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து  அருவிகளிலும்  கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,  5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் யாரும் அருவிகளுக்குச் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.92 ஆண்டு ஏற்பட்ட மழை சேதத்திற்குபின்னர் இப்போதுதான் தொடர்ந்து 5 வது  நாளாக 5 வது முறையாக குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via