இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது திடீரென முறிந்து விழுந்த பனைமரம்

by Editor / 05-08-2022 03:46:39pm
இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது திடீரென  முறிந்து விழுந்த பனைமரம்

திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது சாலையோரம் உள்ள பனை மரம் முறிந்து விழும் சிசிடி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மன்னார்குடி வாவுசி ரோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வெங்கடாசலம் என்பவர் தற்போது கோட்டூர் அடுத்தகலப்பால் ஓஎன்ஜிசி பிளாண்டில்  பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். மேலாக மறவர்காடு பகுதி அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த பனை மரம் ஒன்று முறிந்து பைக்கில் சென்ற வெங்கடாசல மீதுவிழுந்தது.இதில் காயமடைந்த வெங்கடாசலபதிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via