மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

by Staff / 17-02-2023 05:15:25pm
 மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிணற்று தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. விவசாயி. இவரது மனைவி பெருமாத்தாள்( வயது 60). இவர் நேற்று வீட்டில் தொட்டில் கட்டும் கம்பில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் சம்பவ வீட்டுக்கு சென்று, பெருமாத்தாள் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்து போன பெருமாள்தாளுக்கு கொம்பையா, பூல்பாண்டியன் என்ற இரண்டு மகன்களும், பேச்சியம்மாள், கிருஷ்ணம்மாள், ஆறுமுகத்தாய் ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via