வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

by Staff / 30-03-2023 05:27:56pm
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த நபர் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக 2 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24 ஆம் தேதி தன் சொந்த ஊரான சொக்கம்பட்டிக்கு வந்தார் நேற்று இரவு உடல்நிலை குறைவு காரணமாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via