காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்த எடப்பாடியாருக்கு காலிஃப்ளவர் பரிசளித்த வியாபாரி

by Editor / 09-04-2024 10:51:12am
காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்த எடப்பாடியாருக்கு காலிஃப்ளவர் பரிசளித்த வியாபாரி


மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் மருத்துவர். சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காய்கறி மார்க்கெட்டில் கடை,கடை யாக சென்று  வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
ஒவ்வொரு கடைக்கும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
கருவேப்பிலை மல்லித்தழை வியாபாரம் செய்யும் வியாபாரி கிட்ட சென்று பிரசுரங்களை வழங்கிய போது அங்கு அதிமுக தொண்டர்கள் கருவேப்பிலை மல்லித்தழைகளை மிதித்தனர். உடனே டென்ஷனான எடப்பாடி யார் மல்லித்தலைகளை காலில் மிதிக்காதீங்கப்பா வியாபாரி விற்கவேண்டாமா என்றார்.

அதைத்தொடர்ந்து கத்திரிக்காய் வியாபாரம் செய்த வியாபாரியிடம் சென்று ஓட்டு கேட்டு கொண்டே கத்திரிக்காய் எடுத்து பார்த்து பிஞ்சு கத்திரிக்காயா இருக்கு என்றார். நாட்டுக் கத்திரிக்கா என்று வியாபாரி சொன்னதும் விலை என்ன என  கேட்டுவிட்டு நாட்டு காய்களுக்கு விலை இல்லை  என கேட்டுக் கொண்டே சென்றார்.

காய்கறி மார்க்கெட்டுக்குள் வாக்கு கேட்டு சென்றபோது  வியாபாரம் செய்யும் பெண்மணி ஒருவர் எங்களுக்கு இங்கே பாத்ரூம் வசதி இல்லை என்று சொன்னவுடன். கண்டிப்பாக ஆண் பெண்களுக்கு என்ன தனித்தனி கழிப்பிட வசதிகள் செய்து தருகிறேன் கேண்டீன் வசதியும் இங்கு ஏற்படுத்தி தருகிறேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

 

Tags : எடப்பாடியாருக்கு காலிஃப்ளவர் பரிசளித்த வியாபாரி

Share via