போலி வீடியோ பரப்பிய யூடியூபர் மனீஷ் காஷ்யப் 3 நாள் போலீஸ் காவல் .

by Editor / 30-03-2023 11:44:51pm
போலி வீடியோ பரப்பிய யூடியூபர் மனீஷ் காஷ்யப் 3 நாள் போலீஸ் காவல் .

தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பிய மனிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது மதுரை மாவட்ட சைபர் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பீகார் சென்ற மதுரை மாவட்ட காவல்துறையினர் மனிஹ் காஷ்யப்பை கைது செய்து இன்று மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கில் அரசுத்தரப்பு, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தனர்.இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனீஷ் காஷ்யப்பை 3நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு.3ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவு.

 

Tags :

Share via