இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
பெரம்பலூர் பெண்ணகோணத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (27). இவர்களுக்கு 2 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் நிகிதா, நிகிசா ஆகியோர் உள்ளனர். ஜெயா கடலூர், ராமநத்தத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒருவாரத்திற்கு முன்னர் பெண்ணகோணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்ட பிறகு ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெயாவின் தந்தை செல்வராஜ், மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக விஜயகுமாரின் அண்ணன் வினோத் குமார், அவரது மனைவி பிரியா மற்றும் தாயார் தமிழ்செல்வி மீது சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tags :