பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் பரிசு

by Staff / 30-08-2023 02:45:43pm
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் பரிசு

உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளி வென்று, இன்று சென்னை திரும்பிய நிலையில் முதலமைச்சர், அமைச்சரை சந்தித்தார். தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரக்ஞானந்தாவின் பெற்றோர், அரசு அதிகாரிகள், செஸ் கூட்டமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via