சிலிண்டர் கசிவால் தீ விபத்து - மாமனார், மருமகள் படுகாயம்

by Staff / 17-11-2022 01:19:32pm
சிலிண்டர் கசிவால் தீ விபத்து - மாமனார், மருமகள் படுகாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த அனிதா என்பவர் சமையலறையில் சமைப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில் அனிதா படுகாயமடைந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற அவரின் மாமனார் நாகராஜும் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த தீவிபத்து தொடர்பாக எழுமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via