29வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை

by Staff / 24-01-2024 04:40:28pm
29வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை

பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியிலிருந்து 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுமியின் தந்தை ஐடி ஊழியர் என்றும் அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலையிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இயல்பான நிலையில் இல்லாமல் பெற்றோரிடம் சரியாக பேசாமல் இருந்துள்ள சிறுமி இன்று கட்டிடத்தின் 29வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை கொண்டுள்ளதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

 

Tags :

Share via