தனியார் கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல்
திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டியில் மாணவிகளுக்கு தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை தருவதாக கூறி மாணவ, மாணவிகள் இன்று தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இத்தகாரணமாக அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு உருவானது.இதனைத்தொடர்ந்து விரைந்துவந்த காவல்துறையினர் மாணவ,மாணவிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.மேலும் மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த வழங்கு தொடர்பாக அர்ச்சனாஎன்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் ஜோதிமுருகனை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தையொட்டி மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்
Tags :