சென்னையில் 2000 பேருக்கு துரை வைகோ உணவு வழங்கினார்

by Editor / 19-11-2021 06:17:38pm
சென்னையில்  2000 பேருக்கு துரை வைகோ உணவு வழங்கினார்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால், சென்னையில் பாதிப்புக்கு உள்ளான அண்ணா நகர் gகுதி 100ஆவது வட்டத்தில், திரிவேரி மற்றும்  - எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 2000 பேருக்கு அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் முன்னிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உணவு வழங்கினார்.
தென்சென்னை மேற்கு மாவட்டக் கழச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் இராம.அழகேசன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், திமுக பகுதிச் செயலாளர் ச.பரமசிவம், வட்டக் கழகச் செயலாளர் என்.டி.திருலோகசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via