முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனு தள்ளுபடி

by Staff / 23-04-2024 01:20:08pm
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனு தள்ளுபடி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சரணடைவதில் இருந்து எப்படி விலக்கு கோருகிறீர்கள் என்று ராஜேஷ் தாஸுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.கடந்த 2021ஆம் ஆண்டு விழுப்புரம் அருகே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி.க்கு முன்னாள் சிறப்பு டிஜிபி-யான ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

Tags :

Share via