இந்திய அரசின் CSIR_ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக காரைக்குடி விஞ்ஞானி கலைச்செல்வி டெல்லியில் பொறுப்பேற்றார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் இயக்குனர் விஞ்ஞானி டாக்டர்.கலைச்செல்வி ஸ்ரீ கண்ட பிரபன பாலன், இந்திய அரசின் ஆராய்ச்சி நிலைய குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக டெல்லியில் பொறுப்பேற்றார். தலைசிறந்த பத்திரிக்கையாளராகவும் , காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு வித்திட்டவராகவும், சிக்ரி_மனிதவள மேம்பாட்டு அமைப்பின் தலைசிறந்த நிர்வாகியுமான கலைச்செல்வி இப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் டைரக்டர் ஜெனரல் ஆவார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிறந்த இவர் தமிழ் வழியில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :