சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள் அலறிய பயணிகள்

by Editor / 13-08-2022 03:34:06pm
சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள் அலறிய பயணிகள்

சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது. அதை விமானநிலைய அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.

அப்போது அதில், ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் போன்ற விலங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவற்றை அதே விமானத்தில் மீண்டும் பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via