அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதால் கருணைக்கொலை செய்ய தியாகிமகள் கோரிக்கை

by Editor / 14-08-2022 09:26:14am
அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதால்  கருணைக்கொலை செய்ய தியாகிமகள் கோரிக்கை

கோவில்பட்டியில் வறுமையில் வாடும் சுதந்திரப் போராட்டத் தியாகி மாடசாமியின் மகள் ஆதரவற்ற இந்திரா 9 ஆண்டுகளாக தியாகி வாரிசு பென்சனுக்கு அலைந்தும் அது கிடைக்காததால் தன்னை கருணை கொலை செய்து விடும்படி குடியரசுத் தலைவர், கவர்னர், முதலமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு கருணை மனு அனுப்பியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம்  கொண்டாடப்படும் நிலையில்  ஒரு தியாகியின் ஆதரவற்ற மகளை,  பென்சனுக்காக  அதிகாரிகள்  9 ஆண்டுகளாக அலைக்கழிப்பு செய்து வரும் சம்பவம்அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதால்  கருணைக்கொலை செய்ய தியாகிமகள் கோரிக்கை
 

Tags :

Share via