அதிமுகவில் ஆதரவாளர்களோடு இணைந்த அய்யாதுரை பாண்டியன்
சங்கரன்கோவில் தொழிலதிபரும்,கொரோனா காலக்கட்டத்தில் ஏழை எளியமக்கள்,வாகன ஓட்டுனர்கள்,உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் என சுமார் 50ஆயிரம் பேருக்கு கிராமங்களை தேடிச்சென்று அரிசி,பணம்,வேஷ்ட்டி,சேலைகள்,உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் என்பவர் திமுகவில் மாநில வர்த்தக பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் அந்தக்கட்சியிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார்.பின்னர் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இதனைத்தொடர்ந்து அரசியலைவிட்டு விலகியே இருந்த அவர் அய்யாதுரைபாண்டியன் பேரவை என்ற அமைப்பை தொடங்கி நலத்திட்டங்களை செய்வதில் தொடர்ந்து ஆர்வம் கட்டிவந்தார்,இந்த நிலையில் இன்று சேலத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் தனது ஆதரவாளர்களோடு இணைத்துக்கொண்டார்.இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமுரளி,இசக்கிசுப்பையா,முன்னாள் எம்.எல்.ஏ.பி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Tags :