இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்

by Editor / 17-08-2022 11:39:04am
இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்

உத்தரப்பிரதேச மாநிலம் மோடி நகரில் இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் மோடி நகரில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 19 வயது இளம்பெண் ஒருவர், மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண், ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது, யாரோ போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்ததாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார்.

மயக்கமடைந்த பெண்ணை, அறைக்கு தூக்கிச் சென்று 3 நண்பர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

வீட்டிற்கு வந்த சிறுமி, தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் அவர் தனது தந்தையுடன் மோடிநகர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். சேகர், கிருஷ்ணா மற்றும் அர்ஜுன் ஆகியோர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.அவர்களை போலீசார் கைது செய்து, தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via