டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம்
டாஸ்மாக் பார் உரிமை வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடை ஆரோக்கிய தின்பண்டங்கள் விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரித்து உரிமையாளர்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிறுவனம் கடந்த 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி பார் உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் டெண்டர் நடைமுறையை தொடரலாம் என்றும் அதனை இறுதி செய்து யாருக்கும் டெண்டர் வழங்கக்கூடாது என்றும் கூறியதுடன் இந்த மனுவுக்கு டாஸ்மாக் நிர்வாகம் வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Tags :