பேரனின் அன்பு கட்டளையை ஏற்று 42 வருடத்திற்கு பிறகு தியேட்டருக்கு சென்ற தாத்தா

by Editor / 27-08-2022 11:33:03am
பேரனின் அன்பு கட்டளையை ஏற்று 42 வருடத்திற்கு பிறகு தியேட்டருக்கு சென்ற தாத்தா

1980ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமா தியேட்டருக்கே போகாத தனது தாத்தாவை சினிமாவிற்கு அழைத்துச் சென்ற பேரன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கூட்டுக்குடும்பத்தில் மட்டும்தான் தாத்தா- பேரப் பிள்ளைகளுக்கு இடையேயான பந்த பிணைப்பு தனித்துவமான உணர்வுகளை தரக்கூடியதாக இருக்கும்,இன்று கூட்டுக்குடும்பம் என்பது சில இடங்களில் மட்டும்தான் காணமுடிகிறது.அது போக சினிமாவில் மட்டும்தான் காண முடிகிறது.தாத்தா பேரன் உறவுகளை மேம்படுத்தும் வண்ணம் அந்தவகையில் பேரனின் அன்பு கோரிக்கையை ஏற்று 42 வருடங்களுக்கு பிறகு தாத்தா ஒருவர் சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளார்.

மல்டி ஃபிளக்ஸ் திரையரங்கை ஆச்சர்யமாக சுற்றி பார்த்த தாத்தா. திரையரங்கில் அமர்ந்து சினிமா பார்க்கும் வீடியோவை பேரன் தீபக் அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via