கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது

by Editor / 27-08-2022 08:48:07pm
கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது

கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கயிறு இழுக்கும் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இந்த நிலையில் கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு வளர்ப்பு யானைகளை பயன்படுத்தக்கூடாது என்று கேரளா வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி யானைகளை பயன்படுத்தினால் ரூ.50 ஆயிரம் அபராதமும் 2 வருட சிறைதண்டனையும் கிடைக்கும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via