நாகை துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி விபத்து

by Editor / 10-09-2022 01:45:50pm
நாகை துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி விபத்து

நடுக்கடலில் தத்தளித்த கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4, பேர் மீட்பு‌.25, லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் இஞ்சின், வலைகள் நடுக்கடலில் மூழ்கியதால் மீனவர்கள் சோகம்.கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவற்கு சொந்தமான விசைப்படகு 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் விழுந்த ஓட்டை காரணமாக, விசைப்படகு முற்றிலும் நடுக்கடலில் மூழ்கியது.

படகு மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானபிரகாசம் ராஜகுமார் செண்பகம் மனோ ஆகிய 4 மீனவர்களை அவ்வழியே வந்த சகமீனவர்கள் மீட்டு மற்றொரு படகுமூலம் அவர்களை கரைக்கு கொண்டு வந்தனர்

 

Tags :

Share via