மது அருந்திவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

by Editor / 11-09-2022 05:25:09pm
மது அருந்திவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

காஞ்சிபுரம் அருகே மது அருந்துவிட்டு வந்து  தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திய பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பால்பிரபுதாஸ்  என்பவரது மனைவி செல்வராணி பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது மூத்த மகன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் 19 வயதான இளைய மகன் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மது அருந்திவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை கண்டித்ததால்  ஆத்திரமடைந்த தம்பி கத்தியை எடுத்து அண்ணனை குத்தியதாக  கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது .வீட்டில் தடுக்கி விழுந்ததால் கத்திக்குத்து பட்டு விட்டதாக கூறியதை கேட்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் தம்பி மதுபோதையில்  அண்ணனை குத்தியது  தெரியவந்தது. தாயார் நல்லாசிரியர் விருது வாங்க தயாரான நிலையில் அவருடைய இளைய மகனை குடிபோதையில் உடன்பிறந்த சகோதரனை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via