மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்த கணவன்

by Staff / 16-09-2022 01:55:38pm
மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்த கணவன்

ஒடிசா மாநிலம் கோடமேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான பிரசாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவிக்கு கிட்னியில் கல் இருப்பதாக கூறி அவரை நம்ப வைத்துள்ளார். மேலும் இதற்காக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரின் ஒரு கிட்னியை எடுத்து விற்பனை செய்துள்ளார். தன் உடல் நலத்தின் மீது கணவர் இவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்று மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறார் ரஞ்சிதா. ஆனால் மருத்துவர்களுடன் போட்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி மனைவியின் சிறுநீரகத்தை விற்பனை செய்த அவர் அந்த பணத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக ஒரே கிட்னியுடன் வாழ்ந்து வந்த ரஞ்சிதாவுக்கு தற்போது திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்படவே அவர் மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதித்த போது தான் தனக்கு ஒரே ஒரு கிட்னி இருப்பதே அவருக்கு தெரியவந்திருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா கணவரிடம் இது குறித்து விசாரித்த போது தான் கிட்னி விற்ற பணத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் தேதி பல்கான் கிரி காவல் நிலையத்திற்கு சென்று கணவனின் மீது ரஞ்சிதா மோசடி புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via