பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எகிப்து பயணம்

by Staff / 17-09-2022 04:04:09pm
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எகிப்து பயணம்

அதிகாரப்பூர்வ அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் எகிப்து செல்லவுள்ளார். இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் நட்புறவையும் ஒருங்கிணைப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எகிப்து பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகியை ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு உறவை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்வார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசியையும் ராஜ்நாத் சிங் சந்திக்கிறார்.

 

Tags :

Share via