பிறப்பில்லா மரணம்- உண்மையுடன் வாழ்ந்துவிடு

by Editor / 27-09-2022 12:03:53pm
பிறப்பில்லா மரணம்- உண்மையுடன் வாழ்ந்துவிடு

இந்த உலகில் ஓர் அறிவு முதல் ! ஏழாம் அறிவு வரை ! பெற்ற அனைத்தும் ? அதனை சார்ந்து இருக்கும் பொருள் அனைத்தும் ? மண்ணிற்க்கு தான் ! உயிர் விண்ணிற்கு ! உடல் மண்ணிற்கு ! இதை யாராலும் மாற்ற முடியாது !! 

ஒளியில் மறைந்தாலும் ? மண்ணில் புகுந்தாலும் ? நீரில் கரைந்தாலும் ? காற்றில் மிதந்தாலும் ? வானில் உலா வந்தாலும் ? உடல் மண்ணிற்கு தான் ! இயற்கை உனக்கு எதை அளித்ததோ ? அதை வாங்காமல் விடாது !! 

ஆனால் ? நீ செய்த பாவ ! புண்ணியம் ! உன்னை சார்ந்து வருகிறது ! இதற்கே மறு ஜென்மம் !!

நீ வாழும் வரை ! நீ செய்கின்ற நல்லது ! கெட்டது ! அனைத்திற்கும் நீயே காரணகர்த்தா ! காரியம் ! காரணங்கள் ! உன் செயலை பொறுத்து அமைகிறது ! இதுவே இந்த உலகில் உன்னை வாழ வைக்கிறது !!
          
சக்தி என்பது ? உடலாலும் ! மனதாலும் ! உன் பார்வையின் கண்ணோட்டத்தில் மனதின் இயக்கமே ! மனதை வென்றவன் ? மரணத்தை பற்றி கவலை கொள்வதில்லை ? 

இந்த சக்தியை ஆசையின் அடிப்படையில் இயக்க வைத்து ! தன் சுக பந்தங்களை பெருக்கிகொண்டு ? எதுவும் நிரந்தரமில்லை என்று அறிந்தும் ? அதிலிருந்து மீள முடியாமல் ? ஜென்மங்களை பெருக்கி கொள்கிறான் !!
ஆசை யாரையும் விட்டு வைப்பதில்லை ? இந்த ஆசையே இந்த பிரபஞ்சத்தில் உன்னை வாழ வைக்கிறது !!

இதில் நீ செய்கின்ற செயலை பொறுத்து ! உன் வாழ்க்கை அமைகிறது ! இந்த ஆசையே உனக்கு ஏற்றதாழ்வு ! இன்பதுன்பம் ! சோதனை ! சாதனைகளை ! உருவாக்கி ? அதில் உன்னை அமர வைத்து அழகு பார்க்கிறது !!
        
இதற்கு மூலமாக அமைவது மனமே ! மனதை திடபடுத்தியவன் வெற்றி பாதையை நோக்குவான் ! மனமே மந்திரம் ! மனமே மனித சமுதாயத்திற்கு முன்னோடி ! மனதை அதன் போக்கில் விட்டால் ? மரணபயத்தில் தள்ளிவிடும் !! 

எந்த தாய் தந்தை காமத்தின் உறவால் ? மனிதன் பிறந்தானோ ? அன்றே ? அந்த சிசுவிற்கு காமத்தின் பிரதிபலிப்பு மனதில் பதிந்து விடுகிறது !!

இதுவே இந்த உலகில் பலவித பரிணாம சுழற்சியில் உன்னை வாழ வைக்கிறது !!

சிசு பிறப்பிற்கு முன் ? தாயின் அண்டத்தில் ! தந்தையின் உயிரணு நாதத்தில் இணைவே ? அனைத்து சக்திகளுக்கு மூலமாகிறது ! இதுவே மரணமில்லாத வாழ்வை தருகிறது !! 

மனமற்ற நிலையில் சக்தி இணைவே உனக்கு பிரதானமாக இருக்கிறது ! இது தான் சூட்சும சரீரத்தை பெறுகிறது ! இதுவே உலகம் அழிந்தாலும் வாழ்கிறது !! 

பஞ்சபூதங்களை கடந்து செல்லும் ! உலகரகசியங்களின் உண்மையை உணர்த்தும் ! வெட்டவெளியில் வெறுமையே உன்னை இறையாக காட்சி தந்து ! மற்றவர்களை வணங்க வைக்கும் !!

இதுவே ஆத்மபலமாக உருவெடுத்து ? உன்னை மரணத்திலிருந்து விடுவித்து ? ஞானத்தின் ஒளியாக அமைத்து ? இந்த உலகில் எங்கும் ? எதிலும் ? எவருக்கும் ? எப்போதும் ? எதற்கும் ? நீயே மூலவராக இருந்து ! வளம் ! நலத்தை கடந்து ! தெய்வ அம்சமாக திகழ்வாய் !!

மானிடா பிறந்து விட்டோம் ? இனி வாழ்கை உன் கையில் ? வழியில் மேடு ! பள்ளம் ! அசிங்கம் ! நீ தான் பார்த்து நடக்க வேண்டும் ! வருவதை மனதார ஏற்று ? வந்ததை கொண்டு வாழ்ந்துவிடு !!

எதையும் ஏற்கும் உன் முடிவு ! நற்சிந்தனை ! செயலில் நுழைய வைக்கும் ! பிறப்பு ! இறப்பு ! மத்தியில் வாழும் வாழ்க்கை ! உன்னை சார்ந்தது !!

அறிந்து ! தெளிந்து ! நட ! நல்ல ஆசான் (குரு) ! உனக்கு சிறந்த வழிகாட்டி ! அவரே பிறப்பிலிருந்து விடுவித்து ! பிறப்பில்லா மரணத்தில் புகு வைப்பார் !! 

அவரே குரு ! இவ் உலகத்தில் வாழ ? அவர் கரங்களை கெட்டியாக பிடித்து ! மன்றாடி ? நல்ல விஷயங்களை ஆராய்ந்து ? உண்மையுடன் வாழ்ந்துவிடு !!

இதுவே இவ்வுலகிற்கு வந்த உன் ஆன்மாவிற்கு ! நீ செய்யும் உத்தம பணியாகும் !!
 

 

Tags :

Share via