அரசு பேரூந்தில் பயணசீட்டு கேட்ட மூதாட்டி மீது வழக்கு இல்லை - காவல்துறை விளக்கம்
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணம் செய்யமாட்டேன், டிக்கெட் கொடு என நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடத்துநர் கூறியும் வேண்டாம் டிக்கெட் கொடு என வற்புறுத்தி டிக்கெட் வாங்கிக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இதுதொடர்பாக தொடர்பாக மூதாட்டி துளசியம்மாள், வீடியோ எடுத்து வெளியிட்ட பிருத்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில், மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, மற்ற மூவர் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :