தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம்

by Editor / 02-10-2022 09:41:41pm
 தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடங்களில் மிதமான மழை பெய்யும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via