வரலாற்றில் இன்று அக்டோபர் 6…

by Editor / 06-10-2022 09:16:14am
வரலாற்றில் இன்று அக்டோபர் 6…

அக்டோபர் 6  கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது.
கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.

1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.

1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் அட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொன்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.

1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1847 – அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.

1849 – அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.

1854 – இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.

1889 – தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.

1890 – யாழ்ப்பாண நகரில் “சின்னக்கடை” எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.[1]

1908 – ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.

1923 – முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் 13 பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1966 – எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

1973 – 80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.

1976 – சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.

1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 – மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.

1981 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுலாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

1987 – பிஜி குடியரசாகியது.

1995 – வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.

2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

2010 – இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்


1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610)

1732 – நெவில் மசுகெலினே, பிரித்தானிய அரசு வானியலாளர் (இ. 1811)

1831 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)

1846 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1914)

1887 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர், ஓவியர் (இ. 1965)

1893 – மேகநாத சாஃகா, இந்திய வானியலாளர் (இ. 1956)

1897 – புளோரன்ஸ் பி. சீபர்ட், அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 1991)

1921 – அப்துல் அசீஸ், இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1990)

1928 – டி. என். கிருஷ்ணன், கேரள வயலின் இசைக் கலைஞர்

1930 – பஜன்லால், அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2011)

1930 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2015)

1931 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (இ. 2004)

1931 – இரிக்கார்டோ ஜியாக்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2018)

1935 – புலமைப்பித்தன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் (இ. 2021)

1940 – சுகுமாரி, தென் இந்திய திரைப்பட நடிகை (இ. 2013)

1944 – ஜீதன் ராம் மாஞ்சி, பீகாரின் 23-வது முதலமைச்சர்

1946 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2012)

1946 – வினோத் கன்னா, இந்தி நடிகர்

1957 – ஏ. எல். எம். அதாவுல்லா, இலங்கை அரசியல்வாதி

1969 – கெலந்தானின் ஐந்தாம் முகம்மது, மலேசிய மன்னர்

1982 – சிபிராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்


இன்றைய தின இறப்புகள்


1661 – குரு ஹர் ராய், 7வது சீக்கிய குரு (பி. 1630)

1892 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1809)

1905 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானியப் புவியியலாளர் (பி. 1833)

1944 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து அரசியல்சட்ட அறிஞர், இந்தியவியலாளர் (பி. 1879)

1951 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1884)

1962 – ப. சுப்பராயன், சென்னை மாகாணத்தின் முதல்வர் (பி. 1889)

1974 – வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1896)

1981 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)

2008 – ஜானக பெரேரா, இலங்கை இராணுவத் தளபதி (பி. 1946)


இன்றைய தின சிறப்பு நாள்


யோம் கிப்பூர் நினைவு நாள் (சிரியா)

உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)

ஆசிரியர் நாள் (இலங்கை)

 

Tags :

Share via