அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற10-ம் தேதி நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி

by Editor / 07-10-2022 08:25:20am
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற10-ம் தேதி நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளதால், தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுவது, மற்றும் அதிமுக தொடர்பான முடிவுகளை எடுப்பது என தற்போதைய கட்சி நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி பார்த்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் 51-வது ஆண்டுவிழா வருகிற 17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்ட முடிவு செய்துள்ளார். வருகிற திங்கட்கிழமை (10-ம்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், கட்சியின் ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் கட்சியின் நிலைபாடுகள், திமுக அரசின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

 

Tags :

Share via