பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது.

by Staff / 07-10-2022 04:52:04pm
பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை(26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட  ஏற்கனவே இரண்டு பேர் கைதான நிலையில் தற்போது  இந்த வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவும்  கைது. இன்று நெல்லை போலீசாரால்  திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற நிலையில் அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து   கைது செய்துள்ளனர். இவர் மீது  மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவரை பலத்த பாதுகாப்போடு நெல்லைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்திரவுப்படி அழைத்துவரப்படுகிறார்..

 

Tags :

Share via

More stories