மூதாட்டி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி

by Staff / 10-10-2022 04:03:02pm
 மூதாட்டி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி

தொட்டியம் ஒன்றியம் தோளூர் பட்டியில் மூதாட்டி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தார். தோளூர்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பாப்பாத்தி அம்மாள்(85). பாப்பாத்தி அம்மாள் தனது பேத்திகள் நிர்மலா ஸ்ரீதேவி ஆகியோரை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேத்திகள் இருவருக்கும் கொளக்குடியைச் சேர்ந்த மதிமோகன் முரளிதரன் ஆகியோருக்கு தங்களது பேத்திகளை திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த பாப்பாத்தியம்மாள் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார். இந்நிலையில் நிர்மலா தனது பாட்டி பாப்பாத்தி அம்மாளை பார்க்க வந்துள்ளார். அப்பொழுது எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அருகில் உள்ளவர்கள் தகவல் ஏதும் தெரியவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் தொட்டியை பார்த்தபோது அதில் அழுகிய நிலையில் பாப்பாத்தி அம்மன் மிதந்துள்ளார். இதையடுத்து மதிமோகன் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via