ஆம்னி பேரூந்தில் அநியாய கொள்ளை புகார் அளிக்க அழைப்பு.

by Editor / 10-10-2022 10:06:16pm
ஆம்னி பேரூந்தில் அநியாய கொள்ளை  புகார் அளிக்க அழைப்பு.

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு 1800 425 6451 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.

 

Tags :

Share via