சொப்னா தந்த பகீர் தகவல்

by Staff / 11-10-2022 12:50:04pm
சொப்னா தந்த பகீர் தகவல்

சொப்னா விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதிய சுயசரிதை மூலம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. "சதியின் பத்ம வியூகம்" தனது என்ற சுயசரிதையில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் எனது கழுத்தில் தாலி கட்டினார். அப்போது ஒருபோதும் என்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 2 பேரும் கைதான பிறகு முதன்முதலாக என்ஐஏ அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்த போது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது. மேலும், முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via