வட்டார கல்வி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

by Editor / 13-07-2022 02:50:19pm
வட்டார கல்வி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வட்டார கல்வி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மது போதையில் தலைமையாசிரியர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. மேப்பிலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியரான சேகர் நாள்தோறும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் திருநாவலூரில் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் தலைமை ஆசிரியர் சேகரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேகர் மது போதையில் அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாக வார்த்தைகள் பேசியதோடு அலுவலகத்தில் இருந்த பதிவேடுகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி சென்றார். இதனையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via